ADDED : செப் 01, 2025 11:34 PM
குறிஞ்சிப்பாடி: இடப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜோதிலிங்கம்,65; இவரது அண்ணன் மகன் சண்முகம், 45; இவருக்கும், ஜோதிலிங்கத்துக்கும் இடம் தொடர்பாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சண்முகம், ஜோதிலிங்கத்தை கத்தியால் வெட்டினார். இதில், காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார், ஜோதிலிங்கம், சண்முகம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.