Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குறைபாடு வாகனங்களின் தகுதி சான்று ரத்து: கலெக்டர்

குறைபாடு வாகனங்களின் தகுதி சான்று ரத்து: கலெக்டர்

குறைபாடு வாகனங்களின் தகுதி சான்று ரத்து: கலெக்டர்

குறைபாடு வாகனங்களின் தகுதி சான்று ரத்து: கலெக்டர்

ADDED : மே 11, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டு ஆய்வு செய்யும் பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

அனைத்து பள்ளி வாகனங்களும் ஆண்டிற்கு ஒருமுறை அனுமதிச் சீட்டில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றி செயல்படுவதை உறுதி செய்ய மாவட்ட அளவிலான பல்துறை குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.

இக்குழுவினரால் கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெற்று கடலுாரில் இயங்கும் 239 வாகனங்கள், பண்ருட்டியில் 119, நெய்வேலியில் 30, சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெற்று சிதம்பரத்தில் இயங்கும் 391 வாகனங்கள், விருத்தாசலத்தில் 502 என மொத்தம் 1,281 வாகனங்கள் ஆய்வு செய்ய உட்படுத்தப்பட்டது.

கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வாகனங்கள் தணிக்கை செய்யும் பணியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்து, குறைபாடு உள்ள வாகனங்கள் கண்டறியும் பட்சத்தில் தகுதி சான்று ரத்து செய்யப்படும்' என்றார்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (கடலுார் மற்றும் சிதம்பரம்) செல்வம், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் விஜயகுமார், டி.எஸ்.பி., ரூபன் குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் நெய்வேலி பிரான்சிஸ், கடலுார் ஆனந்தன், சிதம்பரம் ரவிச்சந்திரன், விருத்தாசலம் பெரியசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

வாகனங்களில் அவசர வழி கால கதவு, முதலுதவி பெட்டகம், படிக்கட்டுகள் உள்ளிட்ட 18 அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களின் நலன் கருதி சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடந்தது. பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகும் போது தீ ஏற்படும் பட்சத்தில் மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைப்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us