ADDED : அக் 06, 2025 01:46 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் அதெகொ ம் பின்னகம் தொண்டு நிறுவனம் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான கூட்டமைப்பு சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதமொழி தலைமை தாங்கினார். திட்ட அமைப்பாளர் கவிதா முன்னிலை வகித்தார்.
பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, புத்தகம் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. முன்னதாக வளரிளம் பருவத்தினருக்கான திறன் வளர்ச்சி பயிற்சி வகுப்பு நடந்தது.


