ADDED : செப் 02, 2025 03:34 AM
விருத்தாசலம்: எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சைக்கிள் ெஷட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த எரு மனுார் அரசு உயர்நிலை பள்ளியில் எருமனுார், சின்னவடவாடி, எ.வடக்குப்பம், ராசாபாளையம், ரெட்டிக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் வந்து செல்கின்றனர். பள்ளி வளாகத்தில் சைக்கிள் ெஷட் இல்லாததால், திறந்த வெளியில் மாணவர்கள் சைக்கிள்களை நிறுத்திச் செல்கின்றனர்.
வெயிலிலும், மழையிலும் சைக்கிள் பழுதாகி வருகிறது. எனவே, சைக்கிள் ெஷட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.