Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஜி.எஸ்.டி., பொது மன்னிப்பு அமர்வு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு

ஜி.எஸ்.டி., பொது மன்னிப்பு அமர்வு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு

ஜி.எஸ்.டி., பொது மன்னிப்பு அமர்வு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு

ஜி.எஸ்.டி., பொது மன்னிப்பு அமர்வு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு

ADDED : மார் 23, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் ஜி.எஸ்.டி., பொது மன்னிப்பு அமர்வு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

சிவா டேக்ஸ் கன்சல்டன்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கத் தலைவர் கோபு தலைமை தாங்கினார். செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகம்மது, ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தகர்கள் நலச்சங்க இளைஞரணி தலைவர் முத்துஆதவன் உட்பட வர்த்தகர்கள் பலர் பங்கேற்றனர்.

வி.ஆர்.எஸ்., ஜி.எஸ்.டி., அகாடமி நிறுவனர் நீலகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

வரி ஆலோசகர் பூர்ணா செல்வகுமார், அஷ்வினி ஆகியோர் ஜி.எஸ்.டி., பயன்படுத்துவது, ரசீதுகள் பராமரிப்பு, சுயமாக ஜி.எஸ்.டி., பதிவு செய்வது, வங்கி மூலம் மட்டுமே பண வர்த்தனை குறித்து ஆலோசனை வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us