Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கொத்தனார் மீது தாக்குதல்

கொத்தனார் மீது தாக்குதல்

கொத்தனார் மீது தாக்குதல்

கொத்தனார் மீது தாக்குதல்

ADDED : ஜன 03, 2024 12:20 AM


Google News
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பணத்தை திருப்பி கேட்ட கொத்தனாரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தை சேர்ந்தவர் பழனிவேல், 42, கொத்தனார். இவருடன் சித்தாளாக வேலை செய்துவரும் தொரவளூரை சேர்ந்த தேவி, 42, என்பவருக்கு, பழனிவேல், கடன் கொடுத்துள்ளார். அந்த பணத்தை கேட்டதால் தகராறு ஏற்பட்டது. அப்போது, தேவி, அவரது கணவர் பன்னீர்செல்வம், 60, ஆதரவாளர் குப்புசாமி, 45, ஆகியோர் சேர்ந்து பழனிவேலை திட்டி, தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் தேவி உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us