Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு

தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு

தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு

தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு

ADDED : ஜன 07, 2024 05:46 AM


Google News
கடலுார்; பண்ருட்டி அருகே எஸ். ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நாளை (8ம் தேதி) நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவத்துார் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சியில், எஸ். ஏரிப்பாளையம் கிராமம் உள்ளது.

இக்கிராமத்தை தனி ஊராட்சியாக அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நாளை (8ம் தேதி) காலை 11:00 மணியளவில் சேமக்கோட்டை ஊராட்சி எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதி அருகே நடக்கிறது. சிறுவத்தூர் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us