/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்புவண்ண மீன் வளர்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு
வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு
வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு
வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 08, 2024 05:35 AM
கடலுார்: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தை சார்ந்த 30 மீனவர்களுக்கு கட்டணமின்றி வண்ணமீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து மீன்வளத்துறை செய்திக்குறிப்பு:
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தை சார்ந்த 30 மீனவர்களுக்கு கட்டணமின்றி வண்ணமீன் வளர்ப்பு பயிற்சி 2 நாட்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மீனவர்கள் மற்றும் வண்ணமீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மூப்புநிலை அடிப்படையில் பயிற்சி வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ள மீனவர்கள் மற்றும் வண்ணமீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ரேவு மெயின் ரோடு, கடல் உயிரியல் அண்ணாமலை பல்கலைக்கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை 608 502, என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். 04144 243033 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டும், வரும் 10ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.