Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்ட ஏரிகளில் மீன்பிடி உரிமை விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட ஏரிகளில் மீன்பிடி உரிமை விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட ஏரிகளில் மீன்பிடி உரிமை விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட ஏரிகளில் மீன்பிடி உரிமை விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : மே 24, 2025 07:15 AM


Google News
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஏரிகளின் மீன்பிடி உரிமையை குத்தகைக்கு விட ஏதுவாக 23ம் தேதி முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக 23ம் தேதி முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04144-243033 என்ற தொலைபேசி எண் மற்றும் adfparangipettai4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கடலுார் வட்டத்தில் கொண்டங்கி ஏரி, ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீநெடுஞ்சேரி, ஸ்ரீபுத்துார், குணமங்கலம் மற்றும் குன்னத்து ஏரிகள், புவனகிரி வட்டத்தில் சூடாமணி, குமுடிமூலை, சாத்தப்பாடி, வாலாஜா மற்றும் மதுவானமேடு ஏரிகள், பண்ருட்டி வட்டத்தில் சிறுவத்துார், வீரப்பெருமநல்லுார், சேமக்கோட்டை, மனம்தவிழ்ந்தபுத்துார், கொளப்பாக்கம், எலந்தம்பட்டு அவியனுார் ஏரிகள், திட்டக்குடி வட்டத்தில் ஓ.கீரனுார், பூவனுார், தீவளுர், காரையூர், சிறுமுலை, தாழநல்லுார், அரியராவி, பெருமுலை ஏரிகள், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பெருமாள் ஏரி, மேலக்கொளக்குடி ஏரி, குறிஞ்சிப்பாடி பெரிய ஏரி மற்றும் அய்யன் ஏரி, விருத்தாசலம் வட்டத்தில் தர்மநல்லுார், கோபாலபுரம் (எ) வண்ணத்தி ஏரி, வி.குமாரமங்கலம், கம்மாபுரம், சு.கீரனுார், கஸ்பா ஏரி, முகாசப்பரூர், எடச்சித்துார், சத்தியவாடி, எறும்பூர், அலிச்சக்குடி, கார்கூடல், சாத்துக்கூடல், மங்கலம்பேட்டை, இளமங்கலம் ஆகிய 44 ஏரிகள் குத்தகைக்கு விடப்பட உள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us