/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஏ.ஜி.எஸ்., கிருஷ்ணாலயா திரையரங்கம் கடலுாரில் புதுப்பொலிவுடன் திறப்புஏ.ஜி.எஸ்., கிருஷ்ணாலயா திரையரங்கம் கடலுாரில் புதுப்பொலிவுடன் திறப்பு
ஏ.ஜி.எஸ்., கிருஷ்ணாலயா திரையரங்கம் கடலுாரில் புதுப்பொலிவுடன் திறப்பு
ஏ.ஜி.எஸ்., கிருஷ்ணாலயா திரையரங்கம் கடலுாரில் புதுப்பொலிவுடன் திறப்பு
ஏ.ஜி.எஸ்., கிருஷ்ணாலயா திரையரங்கம் கடலுாரில் புதுப்பொலிவுடன் திறப்பு
ADDED : பிப் 10, 2024 05:52 AM

கடலுார்: கடலுாரில் புதுப்பொலிவுடன் நவீன தொழில்நுட்பங்களுடன் ஏ.ஜி.எஸ்., கிருஷ்ணாலயா திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏ.ஜி.எஸ்., எண்டர்டெயின்மென்ட் சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு திரையரங்குகளை தொடங்கியது.
பழைய மகாபலிபுரம் சாலை, தி.நகர், மதுரவாயல் என தொடர்ந்து திரையரங்குகளை விரிவுபடுத்திய கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தலைமையிலான ஏ.ஜி.எஸ்., குழுமம் தற்போது சென்னையில் 18 திரையரங்குகளுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
தமிழக முழுவதும் விரிவுபடுத்தும் விதத்தில் முதல் படியாக கடலுாரில் இருந்து தனது பயணத்தை ஏ.ஜி.எஸ்., தொடங்குகிறது.
கடலுாரில் மிகப் பிரபலமான கிருஷ்ணாலயா திரையரங்கத்துடன் இதற்காக இணைந்து புதுப்பொலிவுடன், அதிநவீன தொழில்நுட்பங்களுடன், பெருநகரங்களைப் போன்ற வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட ஏ.ஜி.எஸ்., கிருஷ்ணாலயா திரையரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.
ஏ.ஜி.எஸ்., நிறுவன நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா கல்பாத்தி முதல் டிக்கெட் வங்கிக்கொண்டு புரொஜக்டரை இயக்கி வைத்தார்.
கிருஷ்ணாலயா திரையரங்கம் உரிமையாளர் துரைராஜ் பணியாளர்களுக்கு பரிசு வழங்கினார். திறப்பு விழாவையொட்டி, தொண்டு நிறுவனங்களில் இருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 200 பேருக்கு இலவசமாக காட்சி மற்றும் தின்பண்டங்கள், உணவுகள் வழங்கப்பட்டது.
இந்த திரையரங்கத்தில், கண்கவர் 4கே திரையிடல், காதுகளுக்கு விருந்தளிக்கும் 64 சேனல் டால்பி அடமாஸ் ஒலி என இதுவரை கடலுார் மாவட்டத்திலேயே இல்லாத அளவில் சர்வதேச தரத்தில் ஏ.ஜி.எஸ்., கிருஷ்ணாலயா திரையரங்கு உள்ளது.