Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயிலில் இருந்து விழுந்தவர் பலி பண்ருட்டி அருகே பரிதாபம்

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி பண்ருட்டி அருகே பரிதாபம்

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி பண்ருட்டி அருகே பரிதாபம்

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி பண்ருட்டி அருகே பரிதாபம்

ADDED : செப் 08, 2025 02:50 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரயில் பாதையில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி - திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கு இடையே நேற்று காலை 5:00 மணியளவில் ரயில்பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார்.

தகவலின்பேரில் கடலுார் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், சடலத்தை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த வாலிபர் கையில் எஸ்.ஆர்.ஏ.எம். என பச்சை குத்தியுள்ளார். இறந்தவர் யார் , எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us