Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன

ADDED : ஜூன் 10, 2025 07:40 AM


Google News
Latest Tamil News
கடலுார் : கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, சமூக பாதுகாப்பு திட்டம் சப் கலெக்டர் தங்கமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 740 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

வருவாய்த்துறை சார்பில் திட்டக்குடி வட்டம், தீவளுர் கிராமத்தை சேர்ந்த மூன்று பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை, மாற்றுத்திறனாளிக்கு 1,14,400 ரூபாய் மதிப்பில் பேட்டரி சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us