Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 5 துப்புரவு ஊழியர்கள் கார் மோதி காயம்

5 துப்புரவு ஊழியர்கள் கார் மோதி காயம்

5 துப்புரவு ஊழியர்கள் கார் மோதி காயம்

5 துப்புரவு ஊழியர்கள் கார் மோதி காயம்

ADDED : ஜூன் 02, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் அருகே சாலையோரம் அமர்ந்திருந்த துாய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

கடலுார் அடுத்த ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.புதுார் கிராமத்தில் நேற்று துாய்மைப்பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பகல் 12:30 மணிக்கு பணியை முடித்து விட்டு ஓய்வுக்காக சாலையோரமாக அமர்ந்திருந்தனர்.

அப்போது தென்னம்பாக்கத்தில் இருந்து ராமாபுரம் நோக்கி வந்த மாருதி செலிரியோ கார், சாலையோரம் அமர்ந்திருந்த துாய்மைப்பணியாளர்கள் மீது திடீரென மோதியது. இதில் வடக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி,41; விஜயா,45; சாத்தாங்குப்பம் ஆசையம்மாள்,60; கிருஷ்ணவேணி,59; தன வைரம்,50; , ஆகியோர் காயமடைந்தனர். உடன், அருகில் இருந்தவர்ள் காயமடைந்தவர்களை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஆசையம்மாள், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us