Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குட்கா விற்ற 4 பேர் கைது 5 கிலோ பறிமுதல்

குட்கா விற்ற 4 பேர் கைது 5 கிலோ பறிமுதல்

குட்கா விற்ற 4 பேர் கைது 5 கிலோ பறிமுதல்

குட்கா விற்ற 4 பேர் கைது 5 கிலோ பறிமுதல்

ADDED : ஜூன் 23, 2025 09:21 AM


Google News
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் 5 கிலோ குட்கா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கடைவீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை நடத்தினர்.

இதில், தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிந்தது. விசாரணையில், மந்தாரக்குப்பம் கடை வீதியைச் சேர்ந்த சதீஷ், 24; என்பதும், கடைகளுக்கு விற்பனைக்காக குட்கா கடத்திச் செல்வதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

மேலும், இவர் அளித்த தகவலின் பேரில், வீடுகளில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த சித்தேரிக்குப்பம் தேவராசு 44; மேல்பாதி சரவணன், 20; நாச்சியார்பேட்டை இந்திரா,39; ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரிடமும் 5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us