Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆடு திருடிய 3 பேர் கைது

ஆடு திருடிய 3 பேர் கைது

ஆடு திருடிய 3 பேர் கைது

ஆடு திருடிய 3 பேர் கைது

ADDED : ஜன 29, 2024 04:15 AM


Google News
கடலுார் : கடலுாரில் ஆடு திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயா, 48. இவர், தனது வீடு முன்பு கடந்த 26ம் தேதி 8 ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, ஒரு ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்து கடலுார், புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். போலீசார், புதுப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக பைக்கில் ஆடு கொண்டு வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். புதுப்பாளையம் சக்திவேல் மகன் சதீஷ்குமார், 21; செந்தில்குமார் மகன் சஞ்சய், 20; ரவி மகன் பிரதாப், 19; என்பதும், ஜெயாவின் ஆட்டை திருடியதும் தெரிந்தது. உடன், போலீசார், மூவரையும் கைது செய்து, ஆட்டை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us