/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை கொள்ளைவீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை
ADDED : பிப் 24, 2024 06:45 AM

வேப்பூர் : வேப்பூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூரைச் சேர்ந்தவர் பர்ஜில்லா,60; இவர் கடந்த 21ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். நேற்று காலை வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது பீரோ திறந்து பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதில் வைத்திருந்த 20 சவரன் நகை திருடு போயிருந்தது. வீட்டின் பக்கவாட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.