Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்னல் தாக்கி 2 ஸ்கூட்டி தீயில் கருகி சேதமானது

மின்னல் தாக்கி 2 ஸ்கூட்டி தீயில் கருகி சேதமானது

மின்னல் தாக்கி 2 ஸ்கூட்டி தீயில் கருகி சேதமானது

மின்னல் தாக்கி 2 ஸ்கூட்டி தீயில் கருகி சேதமானது

ADDED : ஜூன் 09, 2025 06:34 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுாரில் நேற்று இரவு பெய்த கனமழையில் மின்னல் தாக்கி இரண்டு ஸ்கூட்டிகள் தீக்கிரையானது.

கடலுாரில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. அதில் கடலுார் செம்மண்டலம் சுப்பையா நகரைச்சேர்ந்த சரவணன்,41, என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியது.

இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு 2 ஸ்கூட்டிகள் தீபிடித்து எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டின் முன்புறம் தீயால் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கடலுார் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us