/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 2 காதல் திருமண தம்பதிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் 2 காதல் திருமண தம்பதிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்
2 காதல் திருமண தம்பதிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்
2 காதல் திருமண தம்பதிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்
2 காதல் திருமண தம்பதிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்
ADDED : செப் 01, 2025 12:48 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட 2 ஜோடி தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் லோகேஸ்வரன், 28; தனியார் நிறுவன ஊழியர். விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொந்தியப்பன் மகள் மஞ்சமாதேவி, 28; தனியார் நிறுவன ஊழியர்.
இருவரும் சமூக வலைதளம் மூலம் பழகி காதலித்து பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கத்தைச்சேர்ந்தவர் பூபதி மகன் ஷேமநாதன், 22; பைனான்ஸ் நிறுவன ஊழியர்.
கடலுார் எம். புதுாரைச் சேர்ந்தவர் வைத்தி மகள் பிரியங்கா. இருவரும் சமூக வலைதளம் மூலம் பழகி காதலித்து பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டனர்.
இரண்டு காதல் தம்பதி யினரும் பாதுகாப்பு கேட்டு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர்.
இதையறிந்து இரு ஜோடிகளின் பெற்றோர் தரப்பினர் காவல் நிலையம் முன் கூடியதால் பரபரப்பு நிலவியது.
இன்ஸ்பெக்டர் வேலுமணி, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.