ADDED : ஜன 04, 2024 04:02 AM
விருத்தாசலம்: கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி மற்றும் கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களுக்கு தேவையான யூரியாக்களை மாவட்ட நிர்வாகம் பல்வேறு மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.
அதன்படி, ஒடிசா மாநிலத்தில் இருந்து 970 டன் டி.ஏ.பி, மற்றும் 380 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 1, 350 டன் உரம் சரக்கு ரயில் மூலம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. அதன்பின், லாரிகள் மூலம் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தனியார் உர கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.