/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீடு புகுந்து 11 சவரன் கொள்ளை புதுச்சத்திரம் அருகே துணிகரம் வீடு புகுந்து 11 சவரன் கொள்ளை புதுச்சத்திரம் அருகே துணிகரம்
வீடு புகுந்து 11 சவரன் கொள்ளை புதுச்சத்திரம் அருகே துணிகரம்
வீடு புகுந்து 11 சவரன் கொள்ளை புதுச்சத்திரம் அருகே துணிகரம்
வீடு புகுந்து 11 சவரன் கொள்ளை புதுச்சத்திரம் அருகே துணிகரம்
ADDED : ஜூன் 01, 2025 04:39 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே வீடு புகுந்து 11 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி வள்ளி, 70 ; இவர் கடந்த 25ம் தேதி அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 சவரன் நகைளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதுகுறித்து வள்ளி அளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.