ADDED : ஜூலை 03, 2024 05:55 AM

கிள்ளை : பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சி.கொத்தங்குடி ஊராட்சி தலைவர் வேணுகோபால்- அம்சா வேணுகோபால் ஆகியோர் மகள் தீபலஷ்மி மஞ்சள் நீராட்டு விழா சிதம்பரத்தில் நடந்தது.
கார்த்திவாசன் வேணுகோபால் வரவேற்றார். பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று, தீபலஷ்மியை வாழ்த்தினார்.
விழாவில், பரங்கிப்பேட்டை அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட சேர்மன் திருமாறன், சிதம்பரம் நகர துணை செயலாளர் அரிசக்திவேல், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஒன்றிய அவை தலைவர் பேராசிரியர் ரங்கசாமி, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், மாவட்ட பாசரை செயலாளர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் சுவாமிநாதன், மாவட்ட துணை செயலாளர் செல்வம், இளைஞரணி செயலாளர் செழியன் உட்பட கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.
ஊராட்சி தலைவர் அம்சா வேணுகோபால் நன்றி கூறினார்.