ADDED : ஜூன் 13, 2024 05:51 AM
கிள்ளை : கிள்ளை அருகே தந்தைக்கு கரும காரியம் செய்ய, குளத்தில் குளிக்க சென்ற போது, தண்ணீரில் மூழ்கி, சலவை தொழிலாளி உயிரிழந்தார்.
கிள்ளை அடுத்த கீழ் அனுவம்பட்டு பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்தோஷ், 28; சலவை தொழிலாளி.
இவர், இறந்துபோன தனது தந்தைக்கு, கரும காரியம் செய்ய நேற்று அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது, குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, சந்தோஷ் தாய் அரும்பு கொடுத்த புகாரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.