/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர்களுக்கு வரவேற்பு அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர்களுக்கு வரவேற்பு
அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர்களுக்கு வரவேற்பு
அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர்களுக்கு வரவேற்பு
அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 15, 2024 05:38 AM

கடலுார்: கடலுார், வண்டிப்பாளையம் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலுார், வண்டிப்பாளையம் சாலையில் உள்ள அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மழலையர் பிரிவு மாணவர்களை வரவேற்கும் விதமாக கிட்ஸ் மைண்ட் வார்மிங் தின விழா நடந்தது. பள்ளி சேர்மன் சிவக்குமார் தலைமை தாங்கி, மழலையர்களுக்கு பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
விழாவில், பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி, துணை முதல்வர் சங்கீதா, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.