ADDED : ஜூலை 30, 2024 11:19 PM
பெண்ணாடம் : கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, நந்திமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 47, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்த 9 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 300 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.