Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊஞ்சல் உற்சவம் ...

ஊஞ்சல் உற்சவம் ...

ஊஞ்சல் உற்சவம் ...

ஊஞ்சல் உற்சவம் ...

ADDED : ஜூலை 06, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார்.

நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜையும் சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது.பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேணுகோபால சுவாமியை வழிபட்டனர்.அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us