ADDED : ஜூன் 10, 2024 01:16 AM
சிதம்பரம், : சிதம்பரத்தில் பள்ளிப்படை ஆட்டோ மக்கள் நற்பணி சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சிதம்பரம், பள்ளிப்படையில், நேற்று காலை, பள்ளிப்படை ஆட்டோ மக்கள் நற்பணி சங்கம் சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
பேனா பென்சில் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் நடந்தது. ஆட்டோ நற்பணி மக்கள் சங்க தலைவர் அப்துல் மாலிக் தலைமை தாங்கினார். பள்ளிப்படை ஊராட்சி தலைவர் சண்முகம், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
சங்க செயலாளர் ரியாஸ் அகமது, அப்துல் நவாப், மணிவண்ணன், பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.