Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாம்பரம் - திருச்சி இடையே கடலுார் வழியாக கோடை கால சிறப்பு ரயில்

தாம்பரம் - திருச்சி இடையே கடலுார் வழியாக கோடை கால சிறப்பு ரயில்

தாம்பரம் - திருச்சி இடையே கடலுார் வழியாக கோடை கால சிறப்பு ரயில்

தாம்பரம் - திருச்சி இடையே கடலுார் வழியாக கோடை கால சிறப்பு ரயில்

ADDED : மார் 14, 2025 05:15 AM


Google News
கடலுார்: கோடை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, திருப்பாதிரிப்புலியூர் வழியாக தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

கோடை காலத்தில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருச்சியிலிருந்து ஏப்.,4ம் தேதி முதல் ஏப்.,27ம் தேதி வரை வெள்ளி, சனி,

ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5:35 மணிக்கு சிறப்பு ரயில் (06190) புறப்பட்டு, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர்(கடலுார்), பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக பகல் 12:30 மணிக்கு தாம்பரத்தை அடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து ஏப்.,4ம் தேதி முதல் ஏப்.,27ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 3:45 மணிக்கு சிறப்பு ரயில் (06191) புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக அன்றிரவு 10:40 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று முன்தினம் 12ம் காலை 8:00 மணி முதல் துவங்கியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us