Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர் காவல் படை திட்டம் அரசுப் பள்ளியில் துவக்கம்

மாணவர் காவல் படை திட்டம் அரசுப் பள்ளியில் துவக்கம்

மாணவர் காவல் படை திட்டம் அரசுப் பள்ளியில் துவக்கம்

மாணவர் காவல் படை திட்டம் அரசுப் பள்ளியில் துவக்கம்

ADDED : ஜூலை 06, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'மாணவர் காவல் படை' துவக்க விழா நடந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியர் எல்லப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி கலந்து கொண்டு, 'போதை பழக்கத்தால் சமுதாயம் எப்படி சீரழிகிறது என்பது குறித்தும், அதனை எவ்வாறு தடுப்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

விழாவை மாணவர் காவல் படை ஒருங்கிணைப்பாளர் பிரதீப் தொகுத்து வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள் ஜெயஸ்ரீ, மணிமாறன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us