ADDED : ஜூன் 16, 2024 06:07 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில், தமிழ் மாத பிறப்பையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குருசாமிகள் ராதா, வைத்தியநாதன், சிவகுருநாதன், பழனி, கமலக்கண்ணன், கல்யாணசுந்தரம். சாமிபிள்ளை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.