/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிங்கபுரி முருகன் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் சிங்கபுரி முருகன் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
சிங்கபுரி முருகன் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
சிங்கபுரி முருகன் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
சிங்கபுரி முருகன் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
ADDED : ஆக 01, 2024 06:48 AM

கடலுார்: குறிஞ்சிப்பாடி அடுத்த சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வெள்ளி ரதம் வெள்ளோட்டம் மற்றும் வெள்ளி ரதம் கும்பாபிேஷக விழா, ஆடி கிருத்திகை சிறப்பு ேஹாமம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி காலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு ஆடி பூர கொடியேற்றம், காலை 8:30 மணிக்கு சோடச சுப்பிரமணியர் ேஹாமம், இரண்டாம் கால வேள்வி, 10:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. 11:00 மணிக்கு வெள்ளி ரதம் வெள்ளோட்டம், 11:30 மணிக்கு வெள்ளி ரதம் கும்பாபிேஷகம் நடந்தது.
இதையடுத்து, மாலை 4:30 மணிக்கு ஆடி பூர அம்மன் புறப்பாடும், வள்ளி தேவசேனா செல்வ சிங்காரவேலவ பெருமாள் சொர்ண கவசத்துடன் வெள்ளி ரதத்தில் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.