Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலில் மாயமான பள்ளி மாணவர் பலி

கடலில் மாயமான பள்ளி மாணவர் பலி

கடலில் மாயமான பள்ளி மாணவர் பலி

கடலில் மாயமான பள்ளி மாணவர் பலி

ADDED : மார் 14, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே கடலில் குளிக்கும் போது, ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட, மாணவர் உடல் நேற்று கரை ஒதுங்கியது.

வடலுார் அடுத்த பார்வதிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அன்புச்செல்வன், 17; குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன், பெரியக்குப்பம் கடற்கரையில், நேற்று முன்தினம் குளித்தபோது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் புதுச்சத்திரம் அடுத்த நஞ்சலிங்கம் பேட்டை கடற்கரையில், இறந்த நிலையில் அன்புச்செல்வன் உடல் நேற்று கரை ஒதுங்கியது.

புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us