ADDED : மே 07, 2024 04:09 AM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு, : கடலுார் எஸ்.பி., ராஜாராம் நேற்று இரவு 8.30 மணியளவில் திடிரென சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
போலீஸ் நிலையத்தில் நிலுவை வழக்குகள், முடிக்கப்பட்டுள்ள வழக்குகள், பராமரிக்கப்படும் ஆயுதங்கள், ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினார். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபண்குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி உடனிருந்தனர்.
