/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புவனகிரி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை புவனகிரி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
புவனகிரி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
புவனகிரி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
புவனகிரி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2024 10:36 PM
புவனகிரி : புவனகிரி அரசு மருத்துவமனையில் போதிய ஊழியர்கள் இல்லாததால், தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் பணிச்சுமை காரணமாக கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
புவனகிரி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவமனையும் தரம் உயர்த்தப்பட்டது.
மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் கடை நிலை ஊழியர்கள் என அதிகளவில் ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் என பல்வேறு தரப்பினர்கள், அமைப்பினர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது மிக குறைந்த அளவில் உள்ள ஊழியர்கள் இரவு நேரப்பணியில் இருக்கும் போது குடிபோதையில் வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வருபவர்கள், மருத்துவமனையில் உள்ள டாக்டர் மற்றும் ஊழியர்களிடத்தில் பிரச்னை செய்து, வாக்குவாதத்தில் ஈடுபடுவது, தாக்குவது, மருத்துவமனை பொருட்களை சேதப் படுத்துவது உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
மருத்துவமனையில் ஊழியர்கள் பாதுகாப்பில்லாமல் தினசரி அச்சத்தில் பணியாற்றும் அவலம் நீடிக்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பிடவும், ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்திடவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.