ADDED : மார் 15, 2025 12:47 AM
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி காலை அபிேஷக ஆராதனை, தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. இதில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.