/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு தடை முன்பதிவு செய்த பயணிகள் அவதி வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு தடை முன்பதிவு செய்த பயணிகள் அவதி
வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு தடை முன்பதிவு செய்த பயணிகள் அவதி
வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு தடை முன்பதிவு செய்த பயணிகள் அவதி
வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு தடை முன்பதிவு செய்த பயணிகள் அவதி
ADDED : ஜூன் 22, 2024 04:54 AM
கடலுார், : வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களுக்கு தமிழகத்தில் இயக்க தடை விதித்ததால், முன்பதிவு செய்த பயணிகள் அவதிப்பட்டனர்.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்ற வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள், தமிழகத்தில் பயணியர் பஸ்களாக செயல்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதனால் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறு பதிவு செய்யுமாறு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. அதற்கான அவகாசம் முடிவடைந்ததால் தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் இயக்க தடை விதித்தது. இதற்கிடையே கடலுாரில் இருந்து கோயம்புத்துார், பெங்களூரு ஆகிய மாநகரங்களில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஏராளமானோர் ஐ.டி., கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடலுாரில் இருந்து நேரடியாக செல்ல அரசு பஸ் வசதிகள் சரி வர இல்லை. இருப்பினும் கோயம்புத்துார், பெங்களூரு செல்ல தனியார் ஆம்னி பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவையடுத்து வெளிமாநில ஆம்னி பஸ்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் இருக்கையும் ரத்து செய்யப்பட்டு அதற்கான தொகை அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டன.
முன் பதிவு செய்த தொகை மட்டுமே திருப்பி தர முடிந்ததே தவிர அவர்கள் தாங்கள் சேர வேண்டிய ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பல பஸ்கள் மாறி சென்று சேர வேண்டியதாயிற்று என பயணிகள் புலம்பினர்.