ADDED : ஜூலை 25, 2024 06:08 AM
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று முன்தினம், தங்களிக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குபதிந்து, மதுபாட்டில் விற்ற தங்களிக்குப்பத்தை சேர்ந்த ராசவள்ளி, 70, என்பவரை கைது செய்தனர்.