ADDED : ஜூன் 12, 2024 11:57 PM
விருத்தாசலம் : தந்தையை காணவில்லை என, போலீசில் மகன் புகார் செய்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த எம்.புதுார் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவஞானம், 70. தனது மகன் வேல்முருகனுடன் வசித்து வந்தார்.
கடந்த 9ம் தேதி அதிகாலையில் இருந்து சிவஞானத்தை காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
மருமகளுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர், வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்தது.
இது குறித்து அவரது மகன் வேல்முருகன், 39, புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.