ADDED : ஜூன் 16, 2024 10:35 PM

கடலுார் : தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், கடலுார் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
கோவாவில் வரும் 22, 23, 24ம் தேதிகளில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி நடக்கிறது. இதில், கடலுார் டைகர் இண்டர்நேஷ்னல் வில்வித்தை அகாடமி சார்பில், 16 மாணவர்கள், 10 மாணவியர்கள் பங்கேற்கின்றனர். இம்மாணவர்களுக்கு அகாடமி துணை தலைவர் செந்தில், வாழ்த்து தெரிவித்து சீருடை வழங்கினார்.
அப்போது, பயிற்சியாளர் சுரேஷ்குமார் உடனிருந்தனர்.