ADDED : ஜூலை 08, 2024 04:33 AM
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் ஓடைத்தெருவை சேர்ந்தவர் கணேசன் மனைவி காந்தி,60; இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று 7 ம் தேதி அதிகாலை 1:00 மணியளவில் அங்குசெட்டிப்பாளையத்தில் இறங்கி பண்ருட்டி-உளுந்துார்பேட்டை சாலையில் நடந்து சென்றனர்.
அப்போது பண்ருட்டி நோக்கி வந்த ஈச்சர் லாரி காந்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காந்தியை, பண்ருட்டி அரசு மருத்துவமனையிலும், பின் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.