ADDED : ஜூன் 04, 2024 04:21 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, திரு.வி.க., நகரைச் சேர்ந்த ரவி, 50, என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ரவியை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்