ADDED : ஜூலை 15, 2024 02:28 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டுவிழா பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் அருள்தரும் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது.108 சங்கு பூஜை நடத்தி அய்யப்பனுக்கு சங்காபிஷேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் அய்யப்பன் அருள்பாலித்தார்.
பூஜைகளை மோகனசுந்தரம் குருக்கள் செய்தார்.தலைவர் வைத்தியநாதன் செயலாளர் ராதா பொருளாளர் பழனி குருசாமிகள் சிவகுருநாதன்,கமலக்கண்ணன், கல்யாணசுந்தரம், அன்பழகன், குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சேர்மன் ஜெயந்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இரவு அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.