ADDED : ஜூலை 21, 2024 06:18 AM

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் சர்வதேச செஸ் தின விழா நடந்தது.
பள்ளியின்தலைவர்சீனுவாசன் தலைமை தாங்கி, செஸ் போட்டியில் வெற்றி வெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமையாசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு பேசினர்.
செஸ் விளையாட்டு குறித்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. செஸ் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.