Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசுப் பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து சாவு 

அரசுப் பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து சாவு 

அரசுப் பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து சாவு 

அரசுப் பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து சாவு 

ADDED : ஜூலை 31, 2024 04:00 AM


Google News
Latest Tamil News
கடலுார், : கடலுார் அருகே அரசுப் பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

கடலுார் அடுத்த கீழ்கவரப்பட்டை சேர்ந்தவர் செல்வம்,50; மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியரான இவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அருகில் இருந்த ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை, ஆசிரியர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்ததில், ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us