Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

ADDED : ஜூலை 15, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
கடலுார்: திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது.

கடலுார் திருப்பாதிரிபுலியூரில் எழுந்தருளியுள்ள பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது.

இதனையொட்டி பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது.

இதனை தொடர்ந்து சன்னதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் வழிப்பாடு நடந்தது. கருடன் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது, கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனையொட்டி சுவாமிக்கு தினம் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. காலை பல்லாக்கில் சுவாமி புறப்பாடும்.

இரவு சிறப்பு வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வுகளாக வரும் 19ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 20ம் தேதி வெண்ணெய்த் தாழி, 21ம் தேதி தேரோட்டம், 23ம் தேதி 108 கலச திருமஞ்சனம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us