ADDED : ஜூன் 30, 2024 05:24 AM

விருத்தாசலம், : துாத்துக்குடி ஐ.பி.எல்., உர நிறுவனத்தில் இருந்து 124 டன் காம்ப்ளக்ஸ், 450 டன் பொட்டாஷ் உர மூட்டைகள், தலா 10 பெட்டிகள் கொண்டு, இரண்டு சரக்கு ரயில்களில், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தது.
அதனை, லாரிகள் மூலம் கடலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சொசைட்டி மற்றும் தனியார் விற்பனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.