ADDED : ஜூன் 10, 2024 01:17 AM
கடலுார் : கடலுாரில் மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன் தலைமை தாங்கினார். மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் பேசினர்.
மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குறுவை சாகுபடி விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.