ADDED : ஜூலை 03, 2024 03:00 AM

மந்தாக்குப்பம், : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
அதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நிலுவை தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்கிடவும், அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பணி பளுவை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பேரூராட்சி ஊழியர் சங்க நிர்வாகிகள், துப்பரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்