ADDED : ஜூலை 21, 2024 06:27 AM
பெண்ணாடம்: பெரியகொசப்பள்ளம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண்ணாடம் அடுத்த பெரியகொசபள்ளம் செல்வ மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி தீமிதி திருவிழா, கடந்த 12ம்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை அம்மனுக்கு அபிேஷகம், இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் தீமிதி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் ஆடித்திருவிழா நிறைவடைந்தது.