ADDED : ஜூன் 10, 2024 01:11 AM
மந்தாரக்குப்பம் : வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
மந்தாரக்குப்பம் அடுத்த கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் வள்ளி, 22.
வடலுாரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7ம் தேதி தனது வீட்டிலிருந்து வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.