Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மூதாட்டியிடம் செயின் பறிப்பு விருதையில் துணிகரம்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு விருதையில் துணிகரம்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு விருதையில் துணிகரம்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு விருதையில் துணிகரம்

ADDED : ஜூலை 02, 2024 05:42 AM


Google News
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் அம்பிநாதன் மனைவி திராவிடசெல்வி, 62.

இவர், நேற்று மாலை 4:00 மணியளவில் தனது பேரக்குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர சக்தி நகர் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது, இவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர், மூதாட்டியிடம் பேச்சு கொடுப்பதுபோல் நடித்து அவரின் கழுத்தில் கிடந்த2 சவரன் செயினை பறித்தனர்.

இதில், பாதி செயின் மூதாட்டியின் கழுத்தில் சிக்கியது. மீதமிருந்த செயினை பறித்த மர்ம நபர்கள், பைக்கில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us